வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011

திமுக-காங் கூட்டணியை தோற்கடிக்க எந்த கட்சியுடனும் கூட்டணிக்கு தயார்-பாஜக


திமுக காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிக்க, எந்த கட்சிகளுடனும் கூட்டணி அமைக்க பாஜக தயார் என்று அக் கட்சியின் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

பாஜகவை கூட்டணியில் சேர்க்க எந்தக் கட்சியும் முன் வரவில்லை. இதையடுத்து தனித்துப் போட்டியித் தயார் என்று கூறி வரும் பாஜக, அதே நேரத்தில் எந்தக் கட்சியிலாவது கூட்டணி சேரவும் முயன்று வருகிறது.
இந் நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை மற்றும் ஓசூரில் பாஜக தேர்தல் ஆலோசனை கூட்டம், ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.
அதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 சட்டசபை தொகுதிகளிலும் போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் பேசிய ராதாகிருஷ்ணன், மத்தியிலும், மாநிலத்திலும் உள்ள திமுக- காங்கிரஸ் ஊழல் கூட்டணியை தோற்கடிக்க எந்த கட்சிகளுடன் கூட்டணி அமைக்க பாஜக தயாராக உள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் முடிந்து இப்போது 4ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், 2 லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
பணபலம் மற்றும் அதிகாரம் பலமிக்க ஊழல் கூட்டணியை விரட்ட மக்கள் முடிவு செய்து விட்டனர். இதனால் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’