வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 28 பிப்ரவரி, 2011

வைகோ, நெடுமாறன், பாண்டியன் கைது

வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் சிதைக்கு அவமதிப்பு ஏற்படுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக சென்னையில் ஆர்ப்பாட்டமொன்றை நடத்த முயன்ற ம.தி.மு.க. தலைவர் வைகோ, தமிழ் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் நாடு மாநில செயலாளர் த. பாண்டியன் உட்பட 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
.பார்வதி அம்மாளின் சிதைக்கு இலங்கை இராணுவத்தினர் அவமதிப்பை ஏற்படுத்தியதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சுமத்தினர்.
சென்னையிலுள்ள இலங்கையின் பிரதி உயர் ஸ்தானிகராலயத்தை மூடுமாறும் அவர்கள் கோரியதுடன் பிரதி உயர் ஸ்தானிகரலாயத்தை நோக்கி பேரணியாக செல்லவும் முயன்றனர். எனினும் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’