வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 15 டிசம்பர், 2010

மன்மோகன், சிதம்பரம், கருணாநிதி ஆகியோரை கொல்ல புலிகள் திட்டம்: இந்திய புலனாய்வுப் பிரிவு

ந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை கொலை செய்வதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் திட்டமிடுவதாக இந்திய புலனாய்வுப் பிரிவினர் இன்று மாலை எச்சரிக்கை விடுத்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஏறத்தாழ அழித்தொழிக்கப்பட்டுவிட்ட எல்;.ரி.ரி.ஈ. மீண்டும் ஒன்றிணைவதற்கு முயற்சிப்பதுடன் பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி ஆகியோரை இலக்குவைத்து பாரிய தாக்குதல்களை தொடுப்பதற்கும் திட்டமிடுவதாக அச்செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுத்தத்தின்போது தப்பிச்சென்ற எல்.ரி.ரி.ஈ. அங்கத்தவர்கள் சிலர் இந்தியாவில் மீளிணைவதற்கும் முக்கிய அரசியல் தலைவர்கள் தமிழ் நாட்டிற்கு விஜயம் செய்யும்போது அவர்களை கொலை செய்வதற்கு முயற்சிப்பதாகவும் புலனாய்வு தகவல்கள் தெரிவித்துள்ளனவாம்.
இந்தியாவின் முன்னாள் பிரமர் ராஜிவ் காந்தி, 1991 ஆம் ஆண்டில் தமிழகத்தில் எல்.ரி.ரி.ஈ. தற்கொலைப் படையினரால் கொலை செய்யப்பட்ட நிலையில் இந்திய புலனாய்வுப் பிரிவினர் இத்தகவல்களை தீவிரமாக கருத்திற்கொண்டுள்ளனர். இந்திய பிரதமர் மன்மோகன் சிங் அடுத் மாதம் தமிழ் நாட்டிற்கு விஜயம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’