வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 27 டிசம்பர், 2010

பிரதமர் தி.மு. ஜயரட்ன அமைச்சருடன் யாழ் ஆலயங்களுக்கு விஜயம்!

தேசிய பாதுகாப்புத் தினமாகிய இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பிரதமர் தி.மு. ஜயரட்ன இந்து மற்றும் பௌத்த விகாரைகளுக்குச் சென்று வழிபாடுகளில் கலந்து கொண்டார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
முன்னதாக வண்ணார் பண்ணை ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலயத்திற்குச் சென்ற பிரதமர் மற்றும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்டோர் சிறப்பு பூசை வழிபாடுகளில் கலந்து கொண்டனர்.
இச்சிறப்பு பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து நல்லூர் கந்தசாமி கோயிலுக்கும் சென்று வழிபாடுகளில் கலந்து கொண்டனர்.
அடுத்து யாழ் நாக விகாரைக்கான விகாராதிபதியின் வாசஸ்தலத்திற்குச் சென்ற பிரதமர் தலைமையிலான குழுவனர் அவரைச் சந்தித்துக் கொண்டதன் பின்னர் நாக விரைக்கும் சென்று வழிபாடுகளில் கலந்து கொண்டனர்.











0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’