வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 24 டிசம்பர், 2010

புகையிரத வீதி அமைப்பதற்கு கண்டியில் 116 வீடுகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவு

ண்டி - பேராதெனிய நகரங்களுக்கிடையே இரட்டைப் புகையிரத வீதி அமைப்பதற்குத் தடையாக இருந்த 116 வீடுகளை நீதிமன்றத்தின் உத்தரவின்படி உடைக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

கண்டி புகையிரத நிலையத்திலிருந்து கெட்டம்பே வரையிலான பகுதியில் இவ் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டிருந்ததாக புகையிரத தினைக்களத்தின் கண்டி பிராந்திய காரியாலயம் தெரிவித்துள்ளது.
இவ் வீடுகளில் இருந்த பொதுமக்களை வெளியேறுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்த போதும் அவர்கள் வெளியேறாததன் காரணத்தால் நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’