வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 18 நவம்பர், 2010

புலிகளின் ஆயுதப்பிரிவு ஐரோப்பாவில் மீள இயங்குவதற்கு முயற்சி…???

புலிகளின் ஆயுதப்பிரிவு ஐரோப்பாவில் மீள இயங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக பயங்கரவாதத் தடுப்பு தொடர்பான நிபுணர் பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார்.
புலிகளின் ஆயுத மற்றும் புலனாய்வுப் பிரிவினர் இயங்குவதற்கு முனைப்பு காட்டி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஐரோப்பாவின் பல பகுதிகளிலிருந்தும் ஆயுதப் போராட்டத்தை நடத்துவதற்கு புலிகளின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவராகக் கருதப்படும் விநாயகம் என்பவர் முயற்சித்து வருகிறார். விநாயகம் மிகவும் ஆபத்தான நபராவார். கடந்த காலங்களில் தெற்கில் புலிகள் மேற்கொண்ட தாக்குதல்கள், படுகொலைகள் போன்றவற்றை இந்த விநாயகம் என்பவர் வழிநடத்தியுள்ளார். விநாயகத்தின் நோக்கங்கள் மற்றும் இலக்குகள் குறித்து அரசாங்கம் விழிப்புடன் செயற்பட வேண்டும். விநாயகம் ஐரோப்பாவில் சுதந்திரமாக சுற்றித் திரிகிறார். அவரைக் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 2009ம் ஆண்டு பெப்ரவரி மாதம் விநாயகம் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவம் நம்பிக்கை வெளியிட்ட போதிலும் உண்மையில் விநாயாகம் உயிரிழக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’