வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 24 செப்டம்பர், 2010

துப்பாக்கி முனையில் ரூ.7 கோடி கொள்ளை

பேலியகொடை, தெகலபொத பகுதியில் இனந்தெரியாத ஆயுததாரிகளினால் ஏழு கோடி ரூபா பணம் இன்று அதிகாலை கொள்ளையிடப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான பிரஷாந்த ஜயக்கொடி எமது இணையதளத்துக்கு தெரிவித்தார்
.குறித்த பகுதியில் அமைந்துள்ள தனியார் வங்கியொன்றின் ரேலர் இயந்திரத்துக்கு வேன் ஒன்றில் வந்த அதிகாரிகள் சிலர் பணம் இட முற்படுகையிலேயே இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த வேனை மறித்துள்ள ஆயுததாரிகள் ஐவர், அதிலிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவரின் துப்பாக்கிகளையும் பறித்துள்ளதுடன் வேனிலிருந்த ஏழு கோடி ரூபா பணத்தினையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடையதான சந்தேகநபர்கள் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பேலியகொடை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’