வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

துப்பாக்கி பறிப்பு குறித்து தகவல் வழங்குவோருக்கு ஒரு இலட்சம் சன்மானம்

ட்டக்களப்பு புகையிரத நிலயத்துக்கு முன்பாக பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் துப்பாக்கி மற்றும் 30 ரவைகள் பறித்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தகவல் தருபவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபா சன்மானமாக வழங்கப்படும் என மட்டக்களப்பு பொலிஸார் அறிவித்துள்ளனர்
.சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மற்றும் களவாடப்பட்ட துப்பாக்கி தொடர்பாக தகவல் வழங்குபவர்களுக்கு இத்தொகை சன்மானமாக வழங்கப்படும் என பொலிஸார் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக பொதுமக்களின் ஒத்துழைப்பினை பெறும் முகமாக மட்டக்களப்பு நகரின் அனைத்துப் பகுதிகளிலும் குறித்த சன்மானம் தொடர்பான விபரங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’