வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

நீர்வேலி இரும்பு பொருள் உற்பத்தி மையத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விஜயம்.

நீர்வேலி காமாட்சி அம்பாள் கூட்டுறவு கைத்தொழில் சங்கத்தினால் நடாத்தப்படும் இரும்பு பொருள் உற்பத்தி மையத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றையதினம் (23) விஜயம் மேற்கொண்டார்.
இன்று காலை மேற்படி மையத்திற்கு விஜயம் மேற்கொண்டு அம்மையத்தினதும் பட்டறையினதும் நடவடிக்கைகளை பார்வையிட்ட அமைச்சரவர்கள் சங்க நிர்வாகிகளின் தேவைகளையும் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார். மேலும் தேவையற்ற மற்றும் கழிக்கப்பட்ட இரும்புகளை வீணாக வைத்திருந்து சுற்றாடலை மாசுபடுத்தாது அவற்றை விற்று பணமாக்கி சங்கத்தின் தேவைகளுக்கு பயன்படுத்தும்படி அறிவுறுத்திய அமைச்சரவர்கள் தமது அமைச்சினூடாக மேலதிக உதவிகளையும் உற்பத்திசார் ஆலோசனைகளையும் பெற்றுத்தருவதாகவும் உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’