வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாக நடிகர் மீது புகார்

ன்னை திருமணம் செய்வதாக வாக்குறுதியளித்து விட்டு ஏமாற்றியதாக பெண்மணியொருவர் செய்த முறைப்பாட்டையடுத்து, அரசியலில் பிரவேசித்துள்ள பிரபலமான நடிகர் ஒருவரை கட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது
.ஒரு இலட்சம் ரூபாவை பெற்றுக் கொண்டு விட்டு பின்னர் அந்தப் பெண்ணை நடிகர் ஏமாற்றி விட்டுச் சென்றிருப்பதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நடிகர் தன்னை திருமணம் செய்ய வேண்டும் என குறித்த பெண்மணி கோரியபோது, தன்னை அச்சுறுத்தியதுடன் பணத்தை திருப்பிக் கொடுப்பதற்கும் மறுப்புத் தெரிவித்ததாகவும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் நிலையத்திற்கு வந்து வாக்குமூலம் தருமாறு கோரியபோதிலும், நடிகர் பொலிஸ் நிலையத்திற்கு செல்லத் தவறிய நிலையில், அவர் பொலிஸாரால் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’