வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

வடிகானுக்குள்ளிருந்து இரண்டு வார பெண் குழந்தை மீட்பு

மொனராகலை நகரின் வீதியொன்றில் வடிகானுக்குள் கைவிடப்பட்டிருந்த பிறந்து இரு வாரங்களான பெண் குழந்தையொன்றினை உயிருடன் மொனராகலைப் பொலிஸார் மீட்டுள்ளனர்
. மொனராகலைப் பொலிஸ் அதிபர் விஜித்த டி கொமசாரவுக்கு கிடைத்த தொலைபேசித் தகவலொன்றினையடுத்து விரைந்த பொலிஸார் கைவிடப்பட்டிருந்த குழந்தையை மீட்டுள்ளனர்.
பொலிஸாரினால் மீட்கப்பட்டிருந்த குழந்தை மொனராகலை அரசினர் மருத்துவமனை குழந்தைகள் வாட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இக்குழந்தையின் உடல் நிலை முன்னேற்றகரமாக இருப்பதாக மொனராகலை மாவட்ட வைத்திய அதிகாரி டொக்டர் ஆர். எம். ஏ. ரட்னாயக்க தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’