வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 23 ஆகஸ்ட், 2010

குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த 'துரிதசேவைப் பொலிஸ் கார்’

யாழ்ப்பாணத்தில் பெருகிவரும் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தும் முகமாக சம்பவ இடத்துக்கு உடனே விரைந்து செல்லக்கூடிய வகையில் 'அவசர பொலிஸ் கார் சேவை' குடாநாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
பாரதூரமான குற்றச்செயல்கள் இடம்பெறும் பட்சத்தில் பொதுமக்கள் 021 321 0827 என்னும் இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு குற்றச்செயல் குறித்து அறிவிக்க முடியும் என்பதுடன், இந்த 'துரிதசேவைப் பொலிஸ் காரில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து சென்று அதற்கான நடவடிக்கையை மேற்கொள்வார்கள் என்றும் அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டன.
இந்த நடவடிக்கை மூலம் குடாநாட்டில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் பாரதூரமான குற்றச்செயல்கள் குறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’