வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 28 ஆகஸ்ட், 2010

பெண்னொருவருக்கு தொல்லை கொடுத்த நபர் அப்பெண்ணினால் தாக்கப்பட்டு மரணம்

நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கு வசித்து வந்த விதவைப் பெண்னொருவருக்கு தொல்லை கொடுத்த நபர் ஒருவர் அப்பெண்ணினால் தாக்கப்பட்டு மரணமடைந்துள்ளார். இச்சம்பவம் சிலாபம் கொஸ்வத்தை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது
.சிலாபம் லுனுகம சிறியகம்பள எனும் பிரதேசத்தில் கணவரை இழந்த விதவைப் பெண் ஒருவர் தனது இரு பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். இப்பெண்னைத் அடிக்கடி தொந்தரவு செய்து வந்த இறந்த நபர் சம்பவ தினம் இரவு அப்பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்து அங்கிருந்த அப்பெண் மீது தொந்தரவு செய்ய முற்பட்ட போது அங்கிருந்த தடி ஒன்றை எடுத்து அந்நபர் மீது தாக்குதல் நடாத்தியதில் அந்நபர் இறந்துள்ளார்.
இச்சம்பவத்தை அடுத்து நேற்று கொஸ்வத்தை பொலிஸ் நிலையம் சென்ற குறித்த பெண் தனது வீட்டுக்குள் புகுந்து தன்னை தொந்தரவு செய்த நபரை தாக்கியதாகக் கூறி சரணடைந்துள்ளார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’