வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

தர்சிகாவின் அந்தியேட்டி நிகழ்வில் அமைச்சர் கலந்து கொண்டார்

வேலணை மருத்துவமனையின் குடும்பநல சுகாதார உத்தியோகத்தராகப் பணிபுரிந்து அகால மரணமான செல்வி சரவணை தர்சிகாவின் 45ம் நாள் நினைவு நிகழ்வில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று கலந்து கொண்டார் புகைப்படம் இணைப்பு
.கைதடியிலுள்ள தர்சிகாவின் வீட்டுக்குச் சென்ற அமைச்சர் அவர்கள் அவரது பெற்றோருக்கு தனது அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்தார்.
இன்றைய கிரிகைகளுக்கென 25000 ரூபா பெறுமதியான காசோலையை வழங்கியதுடன் குடும்ப நிலையைக் கருத்தில் கொண்டு கட்சி நிதியிலிருந்து மாதாந்தம் 10000 ரூபா வழங்கப்படுமென்றும் உறுதிமொழி வழங்கினார்.
அத்துடன் 45ம் நாள் நிகழ்விற்கு வருகை தந்திருந்த தர்சிகாவின் உற்றார் உறவினர் நண்பர்களுடனும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்துரையாடியதுடன் துயரிலும் பங்கெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.






0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’