வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

குற்றச்சாட்டுக்களிலிருந்து மேர்வின் சில்வா விடுவிப்பு : மைத்திரிபால

முன்னாள் பிரதியமைச்சர் மேர்வின் சில்வா சகல குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார் என சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்
.இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே சுகாதார அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டத்திற்கு சமுகமளிக்காத, களனி பிரதேச சமூர்த்தி உத்தியோகஸ்தர் ஒருவரை மரத்தில் கட்டிவைத்த சம்பவம் தொடர்பில் பிரதியமைச்சருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனையடுத்து அவர் பிரதியமைச்சர் பதவியில் இருந்தும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டார்.
இந்நிலையில், மேர்வின் சில்வா சகல குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மைத்திர்பால சிறிசேன தெரிவித்திருக்கின்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’