வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 5 ஜூலை, 2010

காலஞ்சென்ற மௌலவி நியாஸ் மற்றும் ரெஜினோல்ட் குரே ஆகியோருக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார்.

காலஞ்சென்றவர்களான ஜனாதிபதியின் முஸ்லிம் விவகார ஆலோசகர் மௌலவி எம்.எச்.எம்.நியாஸ் முஹம்மத் மற்றும் பிரதி அமைச்சர் ரெஜினோல்ட் குரேயின் சகோதரர் ஆகியோருக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார்.
நேற்றையதினம் பிரதி அமைச்சர் ரெஜினோல்ட் குரேயின் சகோதரரின் இரத்மலானை இல்லத்திற்கும் மௌலவி நியாஸின் கெசல்வத்தை இல்லத்திற்கும் விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் தமது இறுதி மரியாதைகளையும் அஞ்சலிகளையும் செலுத்திக்கொண்டதுடன் அவர்களின் குடும்பத்தினருக்கும் தமது அனுதாபங்களை தெரிவித்துக்கொண்டார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’