வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 26 ஜூலை, 2010

108 வயது பாட்டிக்குக் குழந்தை ஆசை!

மலேசியாவில் 23 முறை திருமணம் செய்துள்ள 108 வயது பாட்டிக்கு தற்போது 38 வயதில் இளம் கணவர் இருக்கிறார்.



இவர்கள் இருவரும் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிட்டுள்ளனர்.
வயதான ஆண்கள், இளம்பெண்களைத் திருமணம் செய்து கொள்வதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம்.
ஆனால் மலேசியாவில் 103 வயதான பாட்டி 33 வயது இளைஞர் ஒருவரை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடித்துப் புரட்சியை ஏற்படுத்தியுள்ளார். அவரது பெயர் வூக் குந்தர். இது இவருக்கு 23ஆவது திருமணம். கணவர் முகமது நூர் சே மூசா.
இந்த விநோத தம்பதிகளுக்கு குழந்தை இல்லை. இந்த விரக்தியில் நூர், போதை மருந்துக்கு அடிமையானார்.
மறுவாழ்வு நிலையத்தில் சிகிச்சை பெற்று தற்போது குணமடைந்து திரும்பியுள்ளார். குழந்தை ஏக்கத்தில் உள்ள தம்பதியினர், ஏதாவது ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்க திட்டமிட்டுள்ளனர்.
வூக் குந்தர் பணம் படைத்தவரல்லர். வேலைக்குச் சென்று சம்பாதித்து குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய நிலைதான் முகமது நூருக்கு உள்ளது.
இந்த நிலையிலும் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க நினைக்கிறாரே? ஆனால் பாவம் 108 வயதான அவரது மனைவியால் ஒரு பிள்ளையை வளர்த்து ஆளாக்க முடியுமா?

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’