வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 14 ஜூன், 2010

சீனாவில் புத்தரின் மண்டை ஓட்டுக்கு விசேட பூஜை

சீனாவின் கிழக்கு பகுதியில் கௌதம புத்தரின் மண்டை ஓட்டுக்கு நேற்று சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
நஞ்சிங் மாகாணத்திலுள்ள குய்ஸியா என்ற இடத்தில் பழைமை வாய்ந்த புத்தர் கோவில் உள்ளது. இந்த கோவில் தொல் பொருள் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதை தொடர்ந்து அக்கோவில் சீரமைக்கப்பட்டது. அப்போது அங்கு புதைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு மண்டை ஓட்டின் ஒரு பகுதி கண்டெடுக்கப்பட்டது. அது புத்தமதத்தை நிறுவிய கௌதம புத்தரின் மண்டை ஓடு எனத் தெரிய வந்தது.
அந்த மண்டை ஓட்டுக்கு நேற்று சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி சீனாவில் உள்ள அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் இணையத் தளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
புத்தர் மண்டை ஓட்டின் ஒரு பகுதி இந்தியாவில் இருந்து அசோக மன்னரால் உலக நாடுகள் முழுவதும் அனுப்பப்பட்டது. அதில், ஒரு பகுதி சீனாவுக்கும் வந்தது. இது 25,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாக இருக்கலாம் என சீன தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 1,000 ஆண்டுகளாக இது மண்ணில் புதைக்கப்பட்டிருந்ததாகவும் கூறியுள்ளனர்.
மேலும், இந்த மண்டை ஓட்டைக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கண்டுபிடித்ததாகவும், 10 மாத ஆய்வுக்கு பிறகு தான் இது புத்தரின் மண்டை ஓடு என உறுதி செய்ததாகவும் தெரிவித்தனர். _

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’