வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 25 ஜூன், 2010

பொசன் பண்டிகையை நாடு முழுவதிலும் ஐக்கியத்தோடு கொண்டாடுவது மகிழ்வுக்குரியது வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி தெரிவிப்பு

பொசன் பௌர் ணமி தினம் புத்த பெருமானின் தம்ம போதனையை அர ஹத் மஹிந்த தேரர் கொண்டு வந்ததை எமக்கு ஞாபக மூட்டுகின்றது என்ற வகையில் இது இலங்கை எங்கும் வாழும் பௌத்த சமூகத் துக்கு மிகவும் புனிதமான பண்டிகை யாகும். இந்த வரலாற்று முக்கியத்தும் மிக்க பண் டிகையின் இரண்டாயிரத்து முன் னூற்றிப் பதினெட்டாவது பண்டிகையை முழு தேசமும் ஐக்கியத்தோடு கொண்டா டக் கிடைத்தமை எமக்கு மிகுந்த மகிழ்ச் சியை அளிக்கின்றது.
இன்று அனுஷ்டிக்கப்படும் பொசன் தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியில் ஜனாதி பதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அச்செய்தியில் மேலும் கூறப்பட்டுள் ளவை வருமாறு:
""தம்ம போதனைக்கேற்ப வாழுகின்ற ஒருவர் அதன் மூலமே பாதுகாக்கப்ப டுவார்'' என்ற அரஹத் மஹிந்த தேரரின் போதனைகளை எமது வாழ்வில் ஏற்று நடப்பதன் மூலம் இந்தப் பொசன் காலப்பகுதியை அர்த்தமிக்கதாய் மாற்றி புதிய தோர் இலங்கையைக் கட்டி எழுப்புவ தற்கு எம்மை அர்ப்பணிப்போம்.
அரஹத் மஹிந்த தேரரினால் போதிக் கப்பட்ட தம்ம போதனை எமது சமூகத்தை யும், எமது கலாசாரத்தையும் புதியதோர் பாதையை நோக்கி இட்டுச் சென்றது. தம்ம போதனை இன, மத வேறுபாடு களை மறந்து ஒரே நாட்டின் குடிமக்களாக இன நல்லுறவுடன் வாழ்வதற்கான பாதையை எமக்குக் காட்டியது.
அன்பையும், கருணையையும் விரும் புகின்ற உணர்வினால் உந்தப்பட்டு ஒழுக்க விழுமியங்களின் அடிப்படையில் வன்முறைகள் இல்லாத ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு ஒரு தேசமாக நாம் உறுதிகொண்டோம். அரஹத் மஹிந்த தேரரினால் முன்வைக்கப்பட்ட சமாதான மும், அமைதியும் நிறைந்த பாதையைப் பின்பற்றியதன் மூலம் நாம் உலக நாடுகளுக்கு மத்தியில் ஒரு பெருமைமிகு வரலாற்றுக்குச் சொந்தக்காரர்களானோம்.
அரஹத் மஹிந்த தேரரின் போதனை களின் அடிப்படையில் ஒரு சிறந்த தேசத் தைக் கட்டியெழுப்புவதற்கு நாடு இன்று ஒன்றுபட்டுள்ளது. ஒன்றுபட்டு உழைப் பதன் மூலம் வெற்றியைப் பெற்றுக் கொள்ள முடியும். அன்பு மற்றும் கருணை யின் அடிப்படையில் நாம் நல்லிணக்கத் தைக் கொண்டுவரவேண்டும். பிரிவினை கள் எம்மைத் தோல்வியின்பால் இட்டுச் செல்லும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. எமது அரச கொள்கை எப்போதும் தம்ம போதனைகளின் அடிப்படையில் வழிகாட்டப்பட்டுள்ளது என்றுள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’