இலங்கையின் யுத்தத்தினால் இடம்பெயர்ந்து மீளவும் தமது இடங்களில் குடியேறியிருக்கும் வடக்கு கிழக்கு மாகாண மக்களுக்காக 50,000 வீடுகளை அமைப்பதற்கு இந்தியா உறுதியளித்துள்ளது.
இன்றைய தினம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்த உறுதிமொழி வழங்கப்பட்டதாக இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவ் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வடபகுதிக்கான இரயில் பாதைகளை மீள அமைப்பதற்கும் இந்தியா உதவி வழங்குவதற்கு உறுதியளித்துள்ளது.
கடந்த ஆண்டில் நிவாரண முகாம்களுக்காக இந்தியா 11 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’