பருத்தித்துறை தும்பளை தம்புறுவளைப் பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த மகாலிங்கம் சதீஸன் (வயது 26) என்பவர் இனந்தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று (02) இரவு 7.05 மணியளவில் நெல்லியடி - பருத்தித்துறை பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.நெல்லியடி சந்தியிலிருந்து மாலைசந்தி நோக்கிய வீதியில் 300 மீற்றர் தொலையில் புதிய புகைப்படக்கூடம் (லாப்) நாளை (03) திறப்பதற்கான சமயக் கிரிகைகளில் இவர் ஈடுபட்டிருந்த சமயம் மோட்டார் சைக்கிளில் வந்த இரு இனந்தெரியாத நபர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட நபரின் பெயரைக் கூறி அழைத்துள்ளனர். அவர் தனது சகோதரியுடன் புதிய கட்டிடத்தின் மாடியிலிருந்து கீழே இறங்கி வந்து அவர்களுடன் பேச முற்பட்ட போது இவர் மீது இனந்தெரியாத நபர்கள் புலிகள் இயக்கத்தினர் பயன்படுத்தும் மைக்ரோ ரக கைத்துப்பாக்கியினால் 04 தடவைகள் சுட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். முகத்திலும் கன்னத்திலும் துப்பாக்கிச் சூட்டு அடையாளங்கள் காணப்படுகின்றன. வேட்டியும் அதற்கு மேலாக பச்சை நிற சால்வையும் கட்டியிருந்த நிலையில் வீதி ஓரத்தில் இரத்த வெள்ளத்தில் சடலம் காணப்படுகிறது. இச்சம்பவம் குறித்து நெல்லியடிப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து வடமராட்சியின் பல்வேறு பகுதிகளிலும் வீதியில் சென்று வரும் சகல வாகனங்களின் இலக்கத்தகடுகள் பதிவு செய்யப்பட்டு சோதனைகளை இராணுவத்தினர் தீவிரமாக மேற்கொண்டுள்ளனர்.














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’