வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 12 மே, 2010

மாநகரசபையின் மாதாந்த கூட்டம் நடைபெறவில்லை- யாழ்.மாநகரசபை மேஜர்


இன்று நடைபெறவிருந்த யாழ். மாநகரசபையின் 8ஆவது மாதாந்த கூட்டம் இடம்பெறவில்லை என யாழ்.மாநகரசபை மேஜர் ஜோகேஸ்வரி பற்குணராசா சற்று முன்னர் எமது  இணையதளத்திடம் தெரிவித்தார்.
யாழ். மாநகரசபையின் பிரதி மேஜர் இளங்கோ (ரீகன்) கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதன் காரணமாகவே மேற்படி கூட்டம் நடைபெறவில்லை எனவும் அவர் கூறினார்.
இவரது கைது தொடர்பில் நீதி கிடைக்க வேண்டும் எனவும் ஜோகேஸ்வரி பற்குணராசா குறிப்பிட்டார்.
சாவகச்சேரி நீதிவானுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பில் யாழ் மாநகரசபையின் பிரதி மேஜர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இவர் கைதுசெய்யப்பட்டதை கண்டித்து யாழ். மாநகரசபையின் ஊழியர்கள் நேற்று மேற்கொண்டிருந்த பணிப்பகிஷ்கரிப்பு பின்னர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலையீட்டையடுத்து கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’