கையடக்கத்தொலைபேசி ஊடாக பயன்படுத்தப்படும் இணையதளங்கள் தடைசெய்யப்பட வேண்டும் எனக்கோரி பெண் பொலிஸார் மற்றும் சிறுவர் சபையும் இணைந்து இலங்கைத் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவுக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது.
இது தொடர்பில் இலங்கைத் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் அனுஷ பல்பிட்டவிடம் எமது இணையதளம் தொடர்புகொண்டு வினவியது. இதற்குப் பதிலளித்த அவர், இது தொடர்பில் தனக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
ஆனாலும், இதனை அமுல்படுத்துவதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’