வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 12 மே, 2010

நாடு கடந்த தமிழீழ அரசுக்கு எதிராக இரண்டாம் கட்ட நடவடிக்கை


நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைப்பதற்காக விடுதலைப் புலி ஆதரவாளர்கள் எடுக்கும் முயற்சிக்கு எதிராக நடவடிக்கையொன்றை முன்னெடுக்கவுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு கொண்டு வந்துள்ள போதிலும் சர்வதேச ரீதியில் அவ்வமைப்பின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்த இராணுவ பேச்சாளர் பிரசாத் சமரசிங்க, அதற்கு எதிராக அரசாங்கத்தினால் சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் கூறினார்.
உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு சர்வதேச ரீதியில்வழங்கப்பட்ட ஒத்துழைப்பு, தற்போது சர்வதேச ரீதியில் வியாபித்துவரும் புலிகளின் இரண்டாம் கட்ட பயங்கரவாத நடவடிக்கையினைத் தடுக்கவும் வழங்கப்பட வேண்டும் என்றும் இராணுவ பேச்சாளர் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’