வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 12 மே, 2010

தொழிலதிபர் கடத்தப்பட்டு காரோடு எரித்துக் கொலை!

சென்னை யை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கடத்தப்பட்டு காரோடு எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மதுரவாயல் மேம்பாலத்தில் நேற்று நள்ளிரவில் ஒரு கார் தீப்பிடித்து எரிந்த நிலையில் நின்று கொண்டிருந்தது. இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தரப்பட்டது.

கீழ்ப்பாக்கத்தில் இருந்து 3 தீயணைப்பு வண்டிகள் விரைந்து தீயை அணைத்தன. தீயை அணைத்துவிட்டுப் பார்த்தபோது டிரைவர் சீட்டுக்கு அருகில் கருகிய நிலையில் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் கை, கால்கள் கட்டப்பட்டிருந்தன.
கார் எண்ணை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில் அது சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ராஜேந்திர குமார் சாந்திரியாவின் (48) கார் என்று தெரியவந்தது.
காரி்ல் கைகள் கட்டப்பட்டு எரிந்து கிடந்ததும் அவர் தான் என்று தெரியவந்தது. இவரது வீடு வேப்பேரி ஈ.வி.கே. சம்பத் சாலையில் பரித்தாபட் ரோட்டில் உள்ளது.
ராஜேந்திரகுமாருக்கு புதுச்சேரியில் பிளாஸ்டிக் தொழிற்சாலை உள்ளது.
நேற்றிரவு புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு காரை ஓட்டிக் கொண்டு வந்தபோது தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
அவரை யாரோ காரோடு கடத்தி, கட்டி போட்டுவிட்டு காருக்கு தீ வைத்துள்ளனர். ராஜேந்திர குமாருக்கு சங்கீதா என்ற மனைவியும், குஷ்பு (18) என்ற மகளும், ரோணத் (14) என்ற மகனும் உள்ளனர்.
பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’