வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 13 மே, 2010

பத்தாயிரம் முன்னாள் புலிகளின் உறுப்பினர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படும் - டியூ குணசேகர

புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் பத்தாயிரம் பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்படும் என சிறைச்சாலைகள் அமைச்சர் டி.யூ.குணசேகர தெரிவித்துள்ளார்.
புலிகளின் ஆயிரம் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புலி உறுப்பினர்கள் விரைவில் விடுதலை செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக முன்னாள் பெண் புலி உறுப்பினர்களுக்கு மே மாதம் 18ம் திகதி விடுதலை அளிக்கப்படவுள்ளது.
கைது செய்யப்பட்ட 11 ஆயிரம் புலி உறுப்பினர்களில் இரண்டாயிரம் பேர் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’