வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 10 மே, 2010

ததேகூ உறுப்பினர் இருவர் அரசுடன் இணைவு? : தனக்குத் தெரியாது என்கிறார் சுரேஷ்


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் அரசுடன் இணைய உள்ளதாக வெளியான செய்திகள் தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணையவுள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தி குறித்து, நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரமேசந்திரனுடன் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் எமது இணையத்தளத்திற்கு இவ்வாறு தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’