வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 13 மே, 2010

கிழக்கு மாகாண சபையில் தற்காலிகமாக சேவையாற்றிய ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்.


கிழக்கு மாகாண முதலமைச்சர் மேற்கொண்ட அயாராத முயற்சின் பலனாக கிழக்கு மாகாண சபையில் அமைய அடிப்படையில் கடமையாற்றியவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது. 180 நாட்கள் கடமையாற்றிய ஊழியர்களே மேற்படி நிரந்தர நியமனங்களுக்கு உட்படுத்தப்பட்டார்கள்.
கிழக்கு மாகாண சபையில் மேற்படி ஊழியர்கள் கடந்த 31.010.2009 அன்று நியமனம் பெற்று 180 நாட்கள் கடமையாற்றிய பின் அவர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வு கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் செயலகத்தில் இடம்பெற்றது. இவர்களுக்கான நியமனங்களை கிழக்கு மாகாணமுதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் வழங்கி வைத்ததுடன், கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் வீ.பீ.பாலசிங்கம், மற்றும் க.கருணாகரன் முதலமைச்சரின் செயலாளர் ரஞ்சினி நடராஜப்பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டனர்


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’