வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 13 மே, 2010

பருத்தித்துறை இராணுவ முகாமில் வெடிப்புச் சம்பவம்//அராலியில் இராணுவ வீரரின் சடலம் மீட்பு

new- L

பருத்தித்துறை இராணுவமுகாமில் நேற்று மாலை குண்டு வெடிப்பும், துப்பாக்கி சத்தங்களும் தொடர்ந்து ஒலித்ததையடுத்து, வடமராட்சி பகுதியில் பதற்ற நிலை காணப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடமராட்சி பருத்தித்துறையில் உள்ள 52 ஆவது படையணியின் 4 ஆவது பிரிகேட் தளத்தில்நேற்று மாலை 4.30 மணியளவில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்தக் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து அரை மணிநேரத்திற்கும் மேலாக துப்பாக்கி வேட்டு சத்தங்களும் கேட்டுள்ளன.
இராணுவத்தினரின் ஆயுதக்கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தே இதற்கு காரணம் என படைத்தரப்பு தெரிவித்துள்ளது. வெடி விபத்துக்கு மின் ஒழுக்குத்தான் காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இழப்புக்கள் தொடர்பான விபரங்களைப் படைத்தரப்பு வெளியிடவில்லை. நேற்று அதிகாலை வடமராட்சிப் பகுதியில் இராணுவப் பாதுகாப்பு அதிகரித்திருந்ததாகவும் கூறப்படுகிறது.//யாழ்ப்பாணம் அராலிப் பகுதி வண்ணார்குளத்தில் இன்று காலை இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். இராணுவத்தைச் சேர்ந்த ஒருவரின் சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரது இறப்புக்கு வேறு காரணம் உள்ளதா என்பது தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியிடப்படவில்லை.
மேலதிக பரிசோதனைகளுக்காக சடலம் அராலி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படுவதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’