வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 14 மே, 2010

செனட்சபை தலைவர் வி,ஜே.மு ?


அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ளுகின்ற போது செனட் சபையொன்றை உருவாக்குவதற்கு தீர்மானித்துள்ள அரசாங்கம் அந்த செனட் சபையின் தலைவராக முன்னாள் சபாநாயகரும் சப்ரகமுவ மாகாண ஆளுநருமான வி.ஜே.மு. லொக்குபண்டாரவை நியமிப்பதற்கு ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வடக்கு மாகாண சபை தேர்தல் விரைவில் நடத்தப்பட்டு அந்த மாகாண சபையும் ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னரே செனட் சபைக்கான உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர். ஒவ்வொரு மாகாண சபையிலிருந்தும் தலா இரண்டு உறுப்பினர்கள் வீதம் இந்த சபைக்கு தெரிவு செய்யப்படவிருக்கின்றனர்.
மாகாண சபைகளுடன் சம்பந்தப்பட்ட சட்டமூலங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டாலும் அது செனட் சபையிலும் விவாதத்துக்கு உட்படுத்தப்படவேண்டும் என்பதற்காகவே மாகாண சபைகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற இருவர் இந்த சபைக்குள் உள்வாங்கப்படவிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’