வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 10 மே, 2010

கடலில் குளிக்கச் சென்ற மலையக மாணவர்களைக் காணவில்லை : தேடும் பணிகள் தீவிரம் _


வத்தளை பிரீத்திபுர கடலில் குளிக்கச்சென்ற போது கடலலையால் அள்ளுண்டு சென்ற இரண்டு மாணவர்களைத் தேடும் நடவடிக்கைளில் கடற்படையினர் கடந்த இரண்டு நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர்.
வத்தளைக்கு உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் சென்ற பொகவந்தலாவை சீனாக்கலை தோட்டத்தைச்சேர்ந்த ஹொலிறோசரி பாடசாலையில் கல்விக்கற்கும் மாணவர்களே காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது.
அந்தோனிராஜ் நிரோஷன்( வயது 17),இராமலிங்கம் சபேஸ்குமார் (வயது 17) ஆகிய இரண்டு மாணவர்களே இவ்வாறு கடலலையில் இழுத்துச்செல்லப்பட்டுள்ளனர்.
இந்தச்சம்பவம் தொடர்பாக மாணவர்களின் பெற்றோர் வத்தளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமையைத் தொடர்ந்து கடற்படையினரின் உதவியுடன் இந்த மாணவர்களைத் தேடும் நடவடிக்கைள் தொடருகின்றன.
பொகவந்தலாவையிலிருந்து கடந்த 8 ஆம் திகதி வத்தளை ஹெலகந்த பிரதேசத்திலுள்ள உறவினர் வீடொன்றுக்குச் சென்றிருந்த போது மாணவர்கள் இருவரும் அன்றைய தினம் மாலை கடலில் குளித்துக்கொண்டிருந்துள்ளனர்.
அதன்போது தீடிரென மேலெழுந்து வந்த கடலலையால் இந்த மாணவர்கள் இழுத்துச்செல்லப்பட்டனர் என்று நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’