வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 11 மே, 2010

யாழில் இடம்பெறும் கடத்தல், கப்பம் கோரல் சம்பவங்களுக்கு அரசு பதில் கூற வேண்டும் : சுரேஷ் பிரேமச்சந்திரன்


யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் கடத்தல், கப்பம் கோரல் சம்பவங்கள் தொடர்பில் அரசாங்கம் பதில் கூற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனது அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே இவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் கடந்த சில மாதங்களாக கடத்தல், கொலை, கப்பம் கோரல் முதலான சட்டவிரோதமான சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
யாழ்பாணத்தைப் பொறுத்த வரை இராணுவ கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில் கடத்தல், கொலை, கப்பம் கோரல் போன்ற விடயங்கள் இடம்பெறுவதற்கான காரணத்தை அரசாங்கம் முன்வைக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’