வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 30 ஏப்ரல், 2010

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கும் எமக்கும் உள்ள உறவில் எந்த விரிசலும் இல்லை.- தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் - சி;சந்திரகாந்தன்

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத்தேர்தலிலே எமது கட்சியின் உயர்மட்டம் கேட்டுக்கொண்டதற்கிணங்கவே நாம் தனித்து போட்டியிட்டோம். இதனால் எமக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்கும் இடையில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. இதில் எவ்வித உண்மையும் இல்லை.
தொடர்ந்து நாங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் கலந்தாலோசித்து கிழக்கின் அபிவிருத்தி பணிகளை தொடர்ந்து முன்னெடுப்போம் எனவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’