வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 9 ஏப்ரல், 2010

ஐபிஎல் போட்டிகளில் தொடரும் அபராதம் விதிமுறைகள்

கொல்கத்தாவில் புதன்கிழமை நடைபெற்ற டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது,​​நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் 2 ஓவர்கள் குறைவாக பந்து வீசியதால்,​​ கொல்கத்தா அணித்தலைவர் கங்குலிக்கு ரூ.18.40 லட்சமும்,​​ அணி வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.4.60 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தா அணி 2ஆவது முறையாக மேற்படி தவறு செய்ய்துள்ளது. ​ மீண்டும் ஒரு முறை இதே தவறை செய்தால் கங்குலிக்கு ஓர் ஆட்டத்தில் விளையாட தடை விதிக்கப்படும் எச்சரிக்கப்பட்டுள்ளார்.
நடுவரின் இறுதித் தீர்ப்பினை ஏற்காமல் ஸ்ரீசாந்த் எதிர்ப்பு தெரிவித்தது வீரர்களின் நடத்தை விதிமுறைகளை மீறிய செயல் என, “லெவல் 1” விதிப்படி அவர் மீது குற்றம்சாட்டப்பட்டு, போட்டி நடுவர் வெங்கட்ராகவன், ஸ்ரீசாந்த்துக்கு ரூ.4 லட்சத்து 5 ஆயிரம் அபராதமாக விதித்து உள்ளார்.
நேற்றைய போட்டியின் 3ஆவது ஓவரை ஸ்ரீசாந்த் விசினார். லம்ப் அந்த ஓவரை எதிர் கொண்டார்.
எல்லைக் கோட்டுக்கு வெளியே வந்து பந்து வீசியதால் நடுவர் 2 முறை 'நோ' போல் கொடுத்தார். இந்த 2 முறையும் அவர் நடுவரிடம் ஆட்சேபம் தெரிவித்தார். எப்படி 'நோ' போல் கொடுக்க முடியும் என்று அவரிடம் விவாதித்தார்.
முதல் முறையாக நடுவரிடம் ஆட்சேபம் தெரிவித்த போது யுவராஜ்சிங் இடை நின்று மனதை நிலைப்படுத்துமாறு ஸ்ரீறிசாந்திடம் கூறினார்.இருந்தும் 2ஆவது முறையாக 'நோ'போல் கொடுத்த போது ஸ்ரீசாந்த் மீண்டும் ஆட்சேபம் தெரிவித்திருந்தார். இதனையடுத்தே மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’