வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 11 ஏப்ரல், 2010

யாருக்கும் அடிபணியாத பலமான பாராளுமன்றத்தை மக்கள் எமக்கு பெற்றுக் கொடுத்துள்ளனர்

யாருக்கும் அடிபணியாத பாராளுமன்றம் ஒன்றை நாட்டு மக்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு வழங்கியுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

மகிந்த சிந்தனை வேலைத்திட்டத்தினூடாக நாட்டை துரித அபிவிருத்தி செய்வதற்கு பலமான பாராளுமன்றத்தையே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாட்டு மக்களிடம் கோரியது.
அந்த வகையில் இலங்கையை ஆசியாவில் ஆச்சரியமிக்க நாடாக மாற்றுவதற்காக நாட்டு மக்கள் எமக்கு ஆணைவழங்கியுள்ளனர். யாருக்கும் அடிபணியாத மிகவும் நிலையான பாராளுமன்றத்தை மக்கள் எமக்கு பெற்றுக் கொடுத்துள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’