வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 29 ஏப்ரல், 2010

ஊடகத்துறைக்குப் பொருத்தமானவரே : மேர்வினுக்கு விஜித கிண்டல் _

ஊடகத்துறைப் பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள மேர்வின் சில்வாவின் நடத்தைகளை எதிர்காலத்தில் பார்க்கக் கூடியதாக இருக்கும் எனவும் பொருத்தமான ஒருவர் தான் இந்தப் பதவியில் நியமிக்கப்பட்டிருக்கிறார் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கிண்டலாகக் கூறினார்.
ஜனநாயக தேசிய முன்னணியின் விசேட செய்தியாளர் மாநாடு அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
அதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் ஜெனரல் சரத்பொன்சேகா நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் ஊடகவியலாளர் மாநாடொன்றினை நடத்த சாத்தியமுள்ளதா என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த பின்னரே விஜித ஹேரத் இவ்வாறு தெரிவித்தார்.
“இப்போதுதான் நல்ல அமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறாரே… அவர் எப்படிப்பட்டவர் என்பது நம் எல்லோருக்குமே நன்றாகத் தெரியும். இனியும் நாங்கள் பார்க்கத்தானே போகிறோம்... அவர் எப்படி நடந்து கொள்ளப் போகிறார் என்று...?" எனக் கிண்டல் சிரிப்புடன் கூறினார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’