
மாத்தளை மாவட்டத்தில் வரகாமுறை உக்குவளை வத்த என்ற இடத்தில் புதைக்கப்பட்டிருந்த, பிறந்து ஒருநாளான சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மாத்தளை மாஜிஸ்திரேட் சாலியா பெரேரா முன்னிலையில் திங்கட்கிழமை இச்சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.
ஐந்தடி ஆழமான குழியில் சிசுவைப் புதைக்க உதவிய பெண் ஒருவரும், சிசுவின் தாயாரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான பிரேத பரிசோதனையை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும்படி மாத்தளை மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி டி.எல் வைத்திய ரத்னவுக்கு மாஜிஸ்திரேட் சாலியா பெரேரா உத்தரவிட்டார்













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’