வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 22 ஏப்ரல், 2010

தாயைக் கத்தியால் குத்த முயன்ற மகன் உயிரிழப்பு

தாயைக் கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்ற மகனொருவர் அங்கு ஏற்பட்ட ரகளையால் காயப்பட்டு அதிக இரத்தப் பெருக்கினால் உயிரிழந்த சம்பவமொன்று பலாங்கொடை பம்பகின்ன பிரதேசத்தில் இடம்பெற்றிருப்பதாக பொலீசார் தெரிவித்துள்ளனர்.
மரணமான இளைஞர் தாயின் வீட்டுக்கு வந்து அவ்வீட்டின் உறுதிப் பத்திரத்தை தருமாறு நிர்ப்பந்தித்துள்ளார். தாய் அதைக் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த மகன் அவரைக் கத்தியால் குத்த எத்தனித்தபோது வீட்டிலிருந்த மற்றொரு மகன் தாயைக் காப்பாற்ற முயற்சித்துள்ளார். இதன்போது ஏற்பட்ட ரகளையில் கத்திவெட்டுக்கு இலக்காகி அதீத இரத்தப் போக்கினால் கத்தியால் குத்த முற்பட்ட மகன் மரணமாகியுள்ளார். இதனைத் தொடர்ந்து சடலத்தை வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறும் இறந்தவரின் சகோதரரைக் கைது செய்யுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். பலாங்கொடைப் பொலீசார் இதுபற்றிய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’