வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட 40 இலட்சம் ரூபா பெறுமதியான போலி சிகரெட்டுக்கள் மீட்கப்பட்டிருப்பதுடன் அதனுடன் சம்பந்தப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக கலால் திணைக்களத்தின் சுப்ரின்டன் பிரபாத் ஜயவிக்கிரம தெரிவித்தார்.
டுபாயிலிருந்து சட்ட விரோதமான முறையில் கொண்டுவரப்பட்டிருக்கும் கோல்ட் லீப் மற்றும் கோல்ட் சீல் வகையைச் சேர்ந்த 2 இலட்சம் சிகரெட்டுக்களே கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். தனியார் வியாபாரியொருவரது களஞ்சியசாலையிலேயே மேற்படி சிகரெட்டுக்கள் ஆடைகள் மற்றும் பாதணிகளுடன் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’