வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 31 மார்ச், 2010

ஜெனரல் சரத் பொன்சேகாவின் உடல்நிலை மேலும் மோசடைந்துள்ளது : அனோமா தகவல் _

ஜெனரல் சரத் பொன்சேகாவின் உடல்நிலை மேலும் மோசமடைந்துவருவதாக அவரது பாரியார் அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இன்று புதன்கிழமை காலை தனது கணவரை பார்க்கச் சென்று திரும்பிய பின்னர் ஜெனரல் சரத் பொன்சேகாவின் உடல்நிலை பற்றி அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“எனது கணவரின் உடல்நிலை தொடர்ச்சியாக மோசமடைந்துவருகிறது. சுவாசிப்பதற்கும் சிரமப்படுகிறார். இராணுவத்தின் விசேட வைத்திய நிபுணர்களைக் கொண்டு அவரது உடல்நிலை பராமரிக்கப்பட்டுவருவதாக அரசாங்கம் பொய்கூறுகிறது.
அவரது உடலில் துப்பாக்கித் தோட்டாக்கள் இருப்பதால் நோய்கள் வராதவண்ணம் கவனிக்கப்பட வேண்டும். ஆனால் அது தொடர்பில் யாரும் அக்கறை எடுத்துக்கொண்டதாக தெரியவில்லை.
நான் எனது கணவரை பார்க்கச் சென்றிருந்தவேளை விசேட வைத்திய நிபுணரைக் கொண்டு உடல்நிலை பாராமரிக்கப்பட்டதாக சிங்கள நாளிதழ் ஒன்றுக்கு இராணுவப் பேச்சாளர் கூறியிருந்தார். அது அப்பட்டமான பொய்யாகும்" எனத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் உடல்நிலை தொடர்பாக உடனடியாக கவனம் செலுத்தி பிரத்தியேக வைத்தியர்களை நியமிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நேற்று கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’