வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 25 மார்ச், 2010

ஐ.தே.க மற்றும் ஜே.வி.பி. வரலாறு காணாத தோல்வியைத் தழுவும் : மைத்திரிபால சிறிசேன

ஐக்கிய தேசியக் கட்சியும், ஜே.வி.பி கட்சியும் வரலாறு காணாத தோல்வியைத் தழுவும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வரலாற்றில் எந்தவொரு கட்சியும்
நாடாளுமன்றத் தேர்தலில் ஈட்டாத மாபெரும் வெற்றியை தமது கட்சி ஈட்டிக் கொள்ளும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தீவிர ஆதரவாளர்களும் சிரேஸ்ட உறுப்பினர்களும் கிரமமாக ஆளும் கட்சியில் இணைந்து கொள்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கூட்டமொன்றை ஒழுங்கு செய்தால் ஆளும் கட்சியில் இணைந்து கொள்ளும் எதிர்க்கட்சி உறுப்பினர்களை வரவேற்பதில் அதிகளவு நேரம் செலவாவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’