வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 29 மார்ச், 2010

பொதுக்கூட்டங்களின் போது எதிர்க்கட்சிகளுக்கு சேறு பூசும் வகையில் உரையாற்றக் கூடாது : ஜனாதிபதி

பொதுக்கூட்டங்களின் போது எதிர்க்கட்சிகளுக்கு சேறு பூசும் வகையில் உரையாற்றுவதை தவிர்க்குமாறு ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் சகல மாவட்டத் தலைவர்களின் ஊடாக வேட்பாளர்களுக்கு, ஜனாதிபதி இந்த உத்தரவினை அனுப்பி வைத்துள்ளார்.

தேர்தல் மேடைகளில் சில எதிர்க்கட்சி உறுப்பினர்களின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படும் வகையில் சில ஆளும் கட்சி வேட்பாளர்கள் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டு வருவதனால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளுக்கு சேறு பூசும் நடவடிக்கைகளை தவிர்த்து நாட்டின் அபிவிருத்தி கட்சியின் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் தெளிவுபடுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’