வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 24 பிப்ரவரி, 2010

வன்னி மாவட்டத்தில் புளொட்டின் நங்கூரம் சின்னத்தில் போட்டியிடவுள்ளோம் -புளொட் வன்னி பிராந்திய அமைப்பாளர் பவன்!


பொதுத்தேர்தல் தொடர்பில் புளொட் அமைப்பின் வன்னி மாவட்டப் பொறுப்பாளர் திரு.பவன் என்கிற சிவநேசனிடம் எமது இணையம் தொடர்பு கொண்டு கேட்டபோது, தாம் வன்னி மாவட்டத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் இடதுசாரி, முற்போக்கு முன்னணி கட்சிகளுடன் இணைந்து புளொட்டின் நங்கூரம் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாகவும், இந்தவகையில் புளொட் அமைப்பின் சார்பில் புளொட் தலைவர் த.சித்தார்த்தன், புளொட் பிரதிநிதியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான வை.பாலச்சந்திரன், மற்றும் தானும் (புளொட்டின் வன்னிப் பிராந்திய அமைப்பாளர் சிவநேசன் -பவன்) அத்துடன் ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா) மன்னார் மாவட்ட அமைப்பாளர் சிவம் மற்றும் புத்திஜீவிகள், சமூக முக்கியஸ்தர்கள் ஆகியோர் இணைந்து வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளதாகவும், இதேபோன்று யாழ்ப்பாணம் மட்டக்களப்பு மாவட்டத்திலும் புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா) இணைந்து தேர்தலுக்கு முகம்கொடுக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’