வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

தாய்லாந்தில் வன்முறைகள் வெடிக்கும் ஆபத்து .


தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவின் 2.2 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்து பறிமுதல் செய்யப்படுமா, இல்லையா என்பது பற்றி அந்நாட்டு நீதிமன்றம் வரும் வெள்ளிக்கிழமை தீர்ப்பளிக்கவுள்ளது. நீதிமன்றத் தீர்ப்பு தக்சினுக்கு பாதமாக இருந்தால் அவரின் ஆதரவாளர்கள் மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடக்கூடும் என்று கருதப்படுகிறது.

இதனால் நாடு முழுவதும் பாதுகாப்பை அரசாங்கம் வலுப்படுத்தியுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கும் பிரதமர் அபிசித் விஜஜீவாவுக்கும் கூடுதல் பாதுகாப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
ஆயிரக்கணக்கான வீரர்கள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பேங்காக்கிலும் தக்சின் ஆதரவாளர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளிலும் கூடுதலாக 20,000 பாதுகாப்புப் படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’