வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 24 பிப்ரவரி, 2010

தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் கூட்டமைப்பின் வெற்றிக்காக பாடுபடுவேன்: அமைச்சர் முரளிதரன்


எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் பாடுபடப் போவதாக தேச நிர்மாண அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
தாம் தமிழ் மக்களுக்கு மட்டும் உரிமையான தலைவன் அல்ல என அவர் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தம்மீது நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் இந்த நம்பிக்கைக்கு பாத்திரமான வகையில் தாம் செயற்பட உள்ளதாகவும் அவர் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் , சிங்கள முஸ்லிம் என்ற பேதம் பார்த்து தாம் செயற்பட போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் போட்டியிடாமை தொடர்பில் பல்வேறு வதந்திகள் உலவுகின்ற போதிலும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தம்மீது நம்பிக்கை கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’