.jpg)
இரு கொரிய நாட்டவர்களுடன் இணைந்து சீனாவிலிருந்து புலிகளுக்கு ஆயுதங்களை கடத்திய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் கருணாகரன் என்ற நபரை இலங்கை குற்றப்புலனாய்வு துறையினர் கைது செய்துள்ளனர்
கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்பட்ட கருணாகரன் சீனாவிடமிருந்து புலிகளின் கப்பல்கள் மூலம் ஆயுதங்களை கடத்தினார் என்றும் அவரை தொடர்ந்து விசாரணை செய்து கடத்தலுடன் சம்பந்தப்பட்ட இன்னும் பலரை கைது செய்ய வேண்டியுள்ளதாகவும் நீதவானிடம் தெரிவித்த குற்றப்புலனாய்வு துறையினர் சந்தேகநபரை தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரினர்கள். சந்தேகநபரை எதிர்வரும் 26ம் திகதிவரை தடுப்புக் காவலில் வைத்து விசாரிப்பதற்கு அனுமதியளித்த நீதவான் விசாரணை அறிக்கையை நீதிமன்றில் சமர்பிக்குமாறு குற்றப்புலனாய்வு துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’