வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 26 பிப்ரவரி, 2010

சிறுவர் இல்லத்திலிருந்த 14வயது சிறுமியை வல்லுறவுக்குட்படுத்திய படைச்சிப்பாய்!


காலியில் உள்ள சிறுவர் இல்லமொன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 14வயதுச் சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்று யக்கலமுல்லையிலுள்ள வீடொன்றில் வைத்து வல்லுறவு புரிந்த படைச் சிப்பாயை கைது செய்வதற்கு காலி பொலீஸ் சிறுவர் மற்றும் மகளிர் நலப்பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். குறித்த படைச்சிப்பாய் இந்த சிறுமியுடன் காதல் தொடர்பு கொண்டிருந்தாரென்றும், அண்மையில் அவரை ஆசை வார்த்தைகூறி அழைத்துச் சென்று பலமுறை வல்லுறவு புரிந்தாரென்றும் தெரிவிக்கப்படடுள்ளார். அத்துடன் சிப்பாயைத் தொடர்ந்து குறித்த வீட்டின் உரிமையாளரும் இந்த சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்தினார் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேகநபர்கள் இதுவரை கைதுசெய்யப்படாத நிலையில் அவர்களைக் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காலி பொலீசார் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’