
யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதுடன் பருத்தித்துறை துறைமுகத்தையும் சர்வதேச துறைமுகமாக அபிவிருத்தி செய்வதாக ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கடந்த இரண்டாம் திகதி யாழ்ப்பாணம் சென்றிருந்தார்.
யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
யுத்தம் நிறைவடைந்திருப்பதால் சில அதிஉயர் பாதுகாப்பு வலயங்களை நீக்குவதற்கும், சில பாதுகாப்பு வலயங்களின் எல்லையைக் குறைப்பதற்கும் முடியும்.
அனைவருக்கும் சமமான சந்தர்ப்பத்தைப் பெற்றுக்கொடுத்து, ஒழுக்கம் நிறைந்த நாட்டை உருவாக்கி சகல பிரஜைகளுக்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதே தனது நோக்கம் என ஜெனரல் சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’