
ஜனாதிபதித் தேர்தலின் போது ஜெனரல் சரத் பொன்சேகாவின் ஆதரவினை பெற்றுக் கொள்ளும் நோக்கில் ரணில் விக்ரமசிங்க வார இறுதியில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக இணையத் தள செய்தி ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் யாழ்ப்பாணத்தில் உள்ள சகல மதத் தலைவர்களையும் சந்தித்து ஜெனரல் சரத் பொன்சேவுக்கு ஆதரவு திரட்ட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
யாழ்ப்பாணத்தின் முக்கிய பிரதேசங்களில் ரணில் விக்ரமசிங்க தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’