வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 14 டிசம்பர், 2009

பொலிஸ் திணைக்களத்தில் புதிய சூழலென்கிறார் ஜனாதிபதி


இலங்கைப் பொலிஸ் திணைக்களத்தின் கௌரவத்தைப் பாதுகாத்து, கடமைகளை முன்னெடுக்கக்கூடிய சூழலைக் கடந்த நான்கு வருடங்களில் அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.

கடந்த காலப்பகுதியில் பல்வேறு சுற்றறிக்கைகள் மூலம் பொலிஸாரின் உரிமைகள் பறிக்கப்பட்டிருந்ததாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

எனினும் உயர்வு, தாழ்வு பேதங்களின்றித் தமது அரசாங்கம் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்குப் பதவி உயர்வுகளையும் வழங்க நடவடிக்கை எடுத்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்களுடனான கூட்டத்தில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைக் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’